Saturday 4th of May 2024 03:49:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரஷ்யாவில் சிக்கியிருந்த 181 இலங்கையர்கள்   நாடு திரும்பினா்!

ரஷ்யாவில் சிக்கியிருந்த 181 இலங்கையர்கள் நாடு திரும்பினா்!


ரஷ்யாவில் சிக்கியிருந்த 181 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அழைத்துவரப்பட்வா்களில் அதிகளவானவா்கள் ரஷ்யாவில் கல்வி கற்றுவந்த மாணவா்களாவா்.

மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான யு.எல். 1206 இன்று அதிகாலை 5.50 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு திரும்பிய இலங்கையா்களின் அனைத்து உடமைகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. அத்துடன் அனைவரிடமும் கொரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து நாடு திரும்பிய அனைவரும் இராணுவத்தினால் பேருந்துகள் மூலம் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இவா்கள் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய இரண்டாவது தொகுதியினராவா். முன்னதாக கடந்த மே 22 அன்று ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து 261 பயணிகள் அழைத்துவரப்பட்டிருந்தனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE